தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


UPDATED : ஏப் 28, 2026 08:41 PM

ADDED : ஏப் 28, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 08:41 PM ADDED : ஏப் 28, 2026 08:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நாகாத்தம்மன் கோவிலில், மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை, கொட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில், ஏப்ரல் 28 ஆம் தேதி காலை மீனாட்சி - சுந்தரேசுவரர் சுவாமிக்கு 23ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு 10ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை சாமிநாத குருக்கள் நடத்தினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் பொருளாளர் உதயகுமார், அறங்காவலர் குழுவினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us