நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தீராத வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பேட் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 62; கூலித்தொழிலாளி. இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் அவரது அறையில் வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.