நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் கிழக்கு மாட வீதி அருகில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.