ADDED : ஜூன் 24, 2026 02:42 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அருகே மூதாட்டி மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த தொண்டமநத்தம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுந்தரவள்ளி, 80. இவர் கடந்த 20ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.
இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
