நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழுத்தை துணியால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிதீசன் மனைவி சகுந்தலா, 70. இவர் இடுப்பு வலி, மற்றும் முதுகுதண்டு பிரச்னையால், அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வலி குணமாகவில்லை.
இதனால், மனமுடைந்த, அவர், நேற்று முன்தினம் வீட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடியே, புடவையால் கழுத்தை இறுக்கிக் கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.