நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :L ரத்த அழுத்தத்தால், பாதிக்கப்பட்ட மூதாட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை, வீரபத்திரசுவாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமுதவள்ளி, 84. இவர் பல ஆண்டுகளாக சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயால் அவதிப்பட்டு வந்தார். நோய் கொடுமை அதிகமானதால் நேற்று முன்தினம் வீட்டில் குளியலறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

