நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நோயால் அவதிப்பட்ட மூதாட்டி, மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் ஒதியம்பட்டு முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் ஆர்யாபேகம்,60; கிட்னி பாதிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாமல் தீவிரமடைந்தது. அதில் விரக்தியடைந்த ஆர்யாபேகம், கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்த 30 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, அவரது உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆர்யாபேகம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

