/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் 'பைப்'களை மாற்ற ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
/
குடிநீர் 'பைப்'களை மாற்ற ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
குடிநீர் 'பைப்'களை மாற்ற ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
குடிநீர் 'பைப்'களை மாற்ற ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
ADDED : ஜன 09, 2026 05:14 AM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில், குடிநீர் குழாய்களை மாற்ற, டெண்டரை அறிவித்து, பணிகளை துவக்க வேண்டும் என, அ.தி.மு.க, தொண்டர்கள் உரிமை மீட்பு கழக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
அவரது, அறிக்கை;
நெல்லித்தோப்பு தொகுதியில்,பல இடங்களில் கடந்த ஆண்டு, குடிநீர் மாசுபட்டதால், பொதுமக்கள் உடல்நிலை பிரச்னைகளை அனுபவிக்க நேரிட்டது. தொகுதியில் பழைய குழாய்களை அகற்றி, புதிய குழாய்களை அமைக்க வேண்டும் என, போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக, முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், 30 கோடி ரூபாய் மதிப்பில், பெரியார் நகர், டி.ஆர்.நகர்,ஆகிய பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான டெண்டர் அறிவிக்கப்படாமல் உள்ளது.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த பணிக்கான டெண்டரை அறித்து, பணிகளை துவக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

