sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை

/

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை


ADDED : டிச 14, 2024 03:31 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 11 நரசிம்மர்களுக்கு நாளை (15ம் தேதி)ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.

முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இங்கு ஜூவாலா, அகோபில, மாலோல, வராக உள்ளிட்ட, 11 நரசிம்மர்களாக சுவாமி காட்சி தருகிறார். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில்,நரசிம்மர்தன்னுடைய மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம்.

இந்த கோவிலில், நாளை 15ம் தேதி காலை 9:00 மணி முதல்,மதியம் 2:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல்,9:00 மணி வரை, நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.

சகஸ்ரநாம அர்ச்சனை கட்டணம் ரூ.300. இந்த அர்ச்சனையில் கலந்து கொள்பவர்களுக்கு நவ நரசிம்மர் உருவப்படம், தோத்திர புத்தகம், ரட்சை, துளசி மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us