ADDED : ஜூலை 13, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் பிரசன்னா, 34; வீட்டில் பெட் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. நேற்று இரவு 7:00 மணியளவில், பிரசன்னா தனது ைக்கில் துறைமுகம் பகுதிக்கு சென்றார்.
அப்போது எதிரில் நடைபயிற்சி மேற்கொண்ட கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்த கணசேன் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பிரசன்னா சம்பவ இடத்திலியே பரிதாபமாக இறந்தார். கணேசனுக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.