நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஓவராக மது குடித்த பெயிண்டர் மது பாரில் இறந்து கிடந்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் கணேசன், 39; பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் அரியாங்குப்பம் சாலையில் உள்ள தனியார் மதுக்கடையில் ஓவராக மது குடித்து, சுயநினைவு இல்லாமல், படுத்திருந்தார்.
தகவலறிந்து சென்ற உறவினர்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அரியாங்குப்பம், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.