நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கடலுார், கங்கனாங்குப்பத்தைசேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 33; பம்பை உடுக்கை அடிப்பவர். இவர், நேற்று தனது பைக்கில் குருவிநத்தம் சென்று விட்டு, வீடு திரும்பி சென்று கொண்டிருந்தார். முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் வந்தபோது, அவ்வழியாக சென்ற கார் மாயகிருஷ்ணன் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.