தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு கல்லுாரியில் ஆன்லைன் வகுப்பு


ADDED : மார் 28, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்காக புதுச்சேரியில் உள்ள 4 கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்காக லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோத்திலால் நேரு பாலிடெக்னிக், தாகூர் கல்லுாரி ஆகிய 3 கல்லுாரிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (ஸ்டிராக் ரூம்) வைப்பறை, ஓட்டு எண்ணிக்கை மையம் அமைகிறது. மேலும் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில், தேர்தல் பணிக்காக வந்துள்ள துணை ராணுவ படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த 4 கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கள் இருப்பிடங்களிலிருந்து மாணவ, மாணவிகள் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று பாரதிதாசன் கல்லூரியில் நடந்த ஆன்லைன் வகுப்பை கல்லுாரி முதல்வர் மதிவாணன் பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us