/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்னைக்கு மட்டும்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் சட்டசபையில் 16வது முறையாக நிறைவேற்றம்
/
சென்னைக்கு மட்டும்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் சட்டசபையில் 16வது முறையாக நிறைவேற்றம்
சென்னைக்கு மட்டும்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் சட்டசபையில் 16வது முறையாக நிறைவேற்றம்
சென்னைக்கு மட்டும்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் சட்டசபையில் 16வது முறையாக நிறைவேற்றம்
ADDED : மார் 27, 2025 06:56 PM
புதுச்சேரி:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் 16வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை கடந்த 10ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. கடந்த 12ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ. 13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றியும், பட்ஜெட் மீது விவாதமும் நடந்து வந்தது. இறுதி நாளான நேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு ஆகியோர் தனி நபர் தீர்மானங்கள் கொண்டு வந்து பேசினர்.
அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ் வேண்டி சட்டசபையில் 15 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நமக்கு அதிகார விடுதலை கிடைக்கவில்லை. மாநிலத்திற்கு 2007ம் ஆண்டு தனிக்கணக்கு தொடங்கியது முதல், மத்திய அரசு பங்களிப்பு குறைந்து வருகிறது. 2017ல் ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு பின் சொந்த வருவாயில் மாநிலம் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை இந்த சட்டசபை வலியுறுத்துவதாக தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், நிதி கமிஷனில் சேர்ப்பது எல்லாம் மாநில அந்தஸ்து வந்தால் கிடைத்துவிடும்என்பதல், தீர்மானத்தின் மீது பேச எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தீர்மானத்தை ஆதரித்து எம்.எல்,ஏ., க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து, மாநில அந்தஸ்து பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இறுதியாக முதல்வர் ரங்கசாமி பேசுகையில், மாநில அந்தஸ்து பெறுவதுதான் அரசின் எண்ணம். அதுதான் மக்களின் எண்ணமும் கூட. மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை பெற அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் தாங்கள் கொண்டு வந்த மாநில அந்தஸ்திற்கான தனிநபர் தீர்மானங்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர், காலை 12.21 மணியளில் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு 15 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 16-வது முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.