ஹோட்டல் டி எஸ் கிராண்ட் முதலியார்பேட்டையில் திறப்பு
ஹோட்டல் டி எஸ் கிராண்ட் முதலியார்பேட்டையில் திறப்பு
ADDED : அக் 08, 2024 03:15 AM

புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை கடலுார் ரோட்டில், 'ஹோட்டல் டி எஸ் கிராண்ட்' உயர்தர உணவகம் மற்றும் தங்கும் விடுதி திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில், முதல்வர் ரங்கசாமி குத்து விளங்கேற்றி திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணாராவ், முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், 'சசி டிஸ்லரிஸ்' உரிமையாளர் ஜெயவேலு, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹோட்டல் உரிமையாளர்கள் ஆனந்த் மற்றும் வெற்றி விக்னேஷ் ஆகியோர் வரவேற்று, ஹோட்டலின் சிறப்பு அம்சங்களை விவரித்தனர்.
ஹோட்டலில் விசாலமான 15 எக்ஸிகியூடிவ் அறைகள், பொன்னுசாமி செட்டிநாடு உணவகம், நான்காவது மாடியில் 'ரெஸ்டோ பார், ஐந்தாவது மாடியில் திறந்தவெளி உணவகம், விசாலமான 'கார் பார்க்கிங்' வசதிகள் அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.
