ADDED : டிச 31, 2025 03:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காதலுக்கு பெண் வீட்டார் எதிரிப்பு தெரிவிக்கவே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பங்கூர் புதுநகரைச் சேர்ந்தவர் கார்த்தி 21; அரியூரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த கார்த்தி நேற்று அதிகாலை வீட்டில் அவரது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
