sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை

/

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை


ADDED : அக் 13, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; பாகூர் தொகுதியை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், முதியோர், விதவைகள் உள்ளிட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் தொகுதியில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கிடும் நிகழ்ச்சி பாகூர் விஜயவர்தினி மகாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, முதியோர் மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் என, 300 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us