ADDED : பிப் 08, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஓவர் போதையில் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.
அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்தவர் ஆனந்த், 39, இவர், அரியாங்குப்பம் பூக்கடையில், வேலை செய்து வந்தார்.
இவர், நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு மது பார் அருகே, நேற்று முன்தினம் மாலை, ஓவராக மது குடித்துவிட்டு சுயநினைவின்றி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக, தெரிவித்தார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.