ADDED : பிப் 21, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு குஷால் நகர், சவுகார் லைன் பகுதியை சேர்ந்தவர் விஜய், 36. இவர், தன் குடும்பம் மற்றும் உறவினர்கள் என, மொத்தம் எட்டு பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.
நேற்று முன்தினம், சுற்றுலா பயணியர் அனைவரும், வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே, உரிமம் இல்லாமல் நிறுத்தியிருந்த பைபர் படகில் சவாரி செய்தபோது, முகத்துவாரம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், விஜய் மனைவி சோனியா, 32, படகு அடியில் சிக்கி உயிரிழந்தார். இதில், 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, படகின் உரிமையாளரான விஜயகுமார், 38, என்பவரை நேற்று, அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
