ADDED : அக் 09, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில் 'துாய்மை இந்தியா' தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது.
தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கி, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் துருவன், கிருஷாந்த், வீரேஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர் விமலா மற்றும் பலர் செய்திருந்தனர்.