sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு

/

பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு

பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு

பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு


ADDED : அக் 11, 2024 06:00 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாண்லே நிறுவனம், புதுச்சேரியில் துவங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம். இது 101 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை கொண்டுள்ளது.

இந்தநிறுவனம், புதுச்சேரி மக்களுக்கு, 68 ஆண்டுகளுக்கும் மேலாக தரமும், சுவையும் நிறைந்த பாலை, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவிலேயே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதிக கொள்முதல் விலை வழங்கும் மற்றும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்யும் நிறுவனம் பாண்லே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம்,பால் மட்டுமின்றி மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சுவை மிகுந்த பால் பொருட்களான குல்பி, பால்கோவா, நெய், தயிர், மோர், லெஸ்ஸி, நறுமணப்பால், ஐஸ்கிரீம்களையும் உற்பத்தி செய்து, பார்லர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, சிறப்பு ஆர்டரின் பெயரில் தள்ளுபடி விலையிலும், விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை பாண்லேவின் சுவை மிகு பால் பொருட்கள் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்தநிறுவனம், புதுச்சேரி மாநிலத்தின் கூட்டுறவின் முகமாக திகழ்ந்து வருகிறது.

கூட்டுறவு சித்தாந்தம் மேம்படவும், பாண்லே நிறுவனம் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நற்பணியாற்றிட வாடிக்கையாளர்களின் பேராதரவு இன்றியமையாததாகிறது.

அதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பாண்லே பால் பொருட்களை அதிகளவில் வாங்கி பயன் பெற்று, கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனம் தனது வளர்ச்சி பாதையில், ஒரு புதிய மைல் கல்லை எட்டிட பேராதரவினை தொடர்ந்து நல்க வேண்டும் என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us