ஓட்டுச்சாவடியில் திடீர் பதட்டம்; குவிந்த துணை ராணுவத்தினர்
ஓட்டுச்சாவடியில் திடீர் பதட்டம்; குவிந்த துணை ராணுவத்தினர்
ADDED : ஏப் 09, 2026 10:44 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இரு தரப்பினரும் ஓட்டுச்சாவடியில் திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
காலாப்பட்டு தொகுதி, மேஜர் சரவணன் நகர், அரசு ஆரம்ப பள்ளி சாவடியில் ஓட்டுப் பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது ஒருவர் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பதாக புகார் எழுந்தது.
அப்போது அங்கு ஓட்டுபோட வந்த பா.ஜ., வேட்பாளர் கல்யாணசுந்தரம் போலீசாரிடம் சென்று தட்டி கேட்டார். தொடர்ந்து இரு கோஷ்டியினரும் ஓட்டுச்சாவடி அருகே கும்பலாக திரள துவங்கினர்.
அவர்களை போலீசாரும், துணை ராணுவத்தினரும் விரட்டியடித்தனர். இதனால் அந்த ஓட்டுச்சாவடியில் திடீர பரபரப்பு ஏற்பட்டது.
