sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பார்லிமெண்ட் குழு புதுச்சேரி வருகை மத்திய, மாநில நலத்திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு

/

பார்லிமெண்ட் குழு புதுச்சேரி வருகை மத்திய, மாநில நலத்திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு

பார்லிமெண்ட் குழு புதுச்சேரி வருகை மத்திய, மாநில நலத்திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு

பார்லிமெண்ட் குழு புதுச்சேரி வருகை மத்திய, மாநில நலத்திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு


ADDED : பிப் 22, 2024 02:38 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய 30 எம்.பி.,கள் கொண்ட பார்லிமெண்ட் குழு வருகை தந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் கல்வி நிதியுதவி உள்பட பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துகிறது.

இதுமட்டுமின்றி, மத்திய அரசின் நிதியுதவியுடன் 120 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, பார்லிமெண்ட் எம்.பி.,கள் 30 பேர் அடங்கிய குழுவினர் பிப்ரவரி 21, 22ம் ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்வர் என மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய, 30 எம்.பி.,க்கள் கொண்ட பார்லிமெண்ட் குழு நேற்று வருகை தந்தது.

மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி வந்த பார்லிமெண்ட் குழுவிற்கு புதுச்சேரி அரசு சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து குழுவினர் ஓட்டல் அக்கார்ட்டில் தங்கினர். இரண்டாம் நாளான இன்று 22ம் தேதி மதியம் 3:00 மணியளவில் இக்குழுவினர் துறை அதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.

தலைமை செயலர் சரத் சவுகான், புதுச்சேரி அரசின் மக்கள் தொகை, சிறப்புகள் குறித்து விளக்க உள்ளார்.

மேலும் புதுச்சேரி அரசின் திட்டங்களின் தற்போதைய நிலை, அதை வேகப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

பார்லிமெண்ட் எம்.பி.,கள் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய இணை அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள், சங்கங்களை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் பெற முடிவு செய்துள்ளனர்.

மேலும் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், சிதம்பரம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us