ADDED : ஏப் 24, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் பைக் மோதி நடந்து சென்ற வாலிபர் இறந்தார்.
காரைக்கால், திருநள்ளாறு செல்லுார் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 70; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் செல்லுார் கடை தெருவுக்கு சென்ற நாகராஜன் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது.
படுகாயமடைந்த நாகராஜன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.