sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்: அனிபால் கென்னடி

/

ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்: அனிபால் கென்னடி

ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்: அனிபால் கென்னடி

ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்: அனிபால் கென்னடி


ADDED : பிப் 14, 2025 04:20 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஓய்வூதியர்களின் கருத்துகளை கேட்டறிந்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய ஓய்வூதிய திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும் என்பது விதியே தவிர சேராமல் இருக்க மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு சுதந்திரம் உண்டு.

அதன்படி இத்திட்டத்தில் புதுச்சேரியில் விரிவாக்கம் செய்யும்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கருத்துகளை கேட்டறிந்து செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யப்படவில்லை.

புதுச்சேரி அரசு இந்தத் திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. சேர விரும்பாத ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மருத்துவ உதவியாக வழங்கி வருவதை நிறுத்தாமல் வழங்க வேண்டும்.

ஓய்வூதியதாரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அரசு ஓய்வூதியர் சங்கத்துடன் விவாதித்து, முடிவு எடுக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாயை 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us