sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்

/

அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்

அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்

அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்


ADDED : ஜூலை 11, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி - தியாகராஜா வீதி சந்திப்பு பெருமாள் கோவில் அருகே சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது.

புதுச்சேரி, காந்தி வீதி நகரப் பகுதியின் முக்கிய பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், தியாகராஜா வீதி சந்திப்பு பெருமாள் கோவில் எதிரே 4 அடி அகலத்திற்கு, பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி திடீரென பள்ளம் ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அதனை சரி செய்வதற்காக பணிகளில் ஈடுபட்டனர்.

இதேபோல், நேற்று முன்தினம் வள்ளலார் சாலை 45 அடி ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்து, நகரப்பகுதியின் முக்கிய சாலைகளின் நடுவே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்படுவதற்காக காரணங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us