/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கோவில்களில் குவிந்த மக்கள் மணக்குள விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
/
புதுச்சேரி கோவில்களில் குவிந்த மக்கள் மணக்குள விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
புதுச்சேரி கோவில்களில் குவிந்த மக்கள் மணக்குள விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
புதுச்சேரி கோவில்களில் குவிந்த மக்கள் மணக்குள விநாயகர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
ADDED : ஜன 02, 2024 06:18 AM

புதுச்சேரி : புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் மக்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
உற்சவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மணக்குள விநாயகரை தரிசனம் செய்வதற்கு அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அமைச்சர் லட்சுமிநாராயணன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் ராஜவேலு, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ராமலிங்கம், ரிச்சர்டு, சிவசங்கர், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, காலையில் நாதஸ்வர கச்சேரியும், மாலையில் சங்கீத சலங்கை நாட்டியாலயா மாணவர்களின் இசைக் கச்சேரியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, திலாஸ்பேட்டை விநாயகர் கோவில், காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ் வரர் கோவில், வரதராஜ பெருமாள், மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாசப் பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், சின்னசுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவில், ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், சித்தானந்த சுவாமி கோவில், கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

