/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
/
போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்
ADDED : மார் 29, 2025 04:04 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள போலீஸ் மற்றும் சைபர் கிரைம் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் மற்றும் சைபர் கிரைம் ஸ்டேஷன்களில் இன்று (29ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது.
உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.
இதேபோல், தவளக்குப்பம், ரெட்டியார்பாளையம், திருபுவனை போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் மக்கள் மன்றம் நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு போலீஸ், சைபர் கிரைம் சம்மந்தமான குறைகள் மற்றும் ஆலோசனைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.