/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 15 போன்கள் ஒப்படைப்பு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி 15 போன்கள் ஒப்படைப்பு
ADDED : ஆக 31, 2025 05:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி, மக்கள் தவறவிட்ட மொபைல்களை மீட்டு சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. எஸ்.பி., பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இதில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, சைபர் கிரைம் தொடர்பான பல்வேறு குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்தனர். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்களுக்கு சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இழந்த ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் டிஜிட்டல் அரஸ்ட் வழக்கில் ரூ. 9 லட்சத்து 69 ஆயரத்தை மீட்டதுடன், குற்றவாளிகளை விரைவாக கைது செய்ததற்காக, பணத்தை இழந்தவர்கள் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 15 மொபைல் போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.