ADDED : செப் 27, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் 757 வது திருநட்சத்திர மகோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது.
வரும் 2ம் தேதி வரை நடக்கும் மகோற்சவத்தில் தினமும் காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், திவ்ய பிரபந்த பாராயணம், காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு சேவாகாலம், உபன்யாசம், இசைக்கச்சேரி, இரவு 7:00 மணிக்கு சாற்று முறை புறப்பாடு நடக்கிறது.
வரும் 2ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்களா சாசனம், 10:00 மணிக்கு மூலவருக்கு தேசிகன் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.