/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை
/
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை
புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை
ADDED : மார் 21, 2026 05:19 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை இந்திரா சதுக்கம் அருகே ரெட்டியார்பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி, சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, மாநில எல்லை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு துணை ராணுவம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், விஷ்ணு பிரதாபன் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவு புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, இந்திரா சதுக்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்பரம் செல்லும் வாகனங்களில் மதுபாட்டில் கடத்தப்படுகிறதா, தமிழகத்தில் இருந்து பணம், பரிசு பொருட்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர்.

