ADDED : மார் 09, 2026 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கிருமாம்பாக்கம் போலீசார் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பத்தை உறுதி செய்யும் வகையிலும், ஓட்டு அளிக்கும் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன ்ஒரு பகுதியாக, கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா தலைமையில், நேற்று முள்ளோடை, மதிக்கிருஷ்ணாபுரம், கன்னியக்கோவில், கொரவள்ளிமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில், சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

