ADDED : மார் 17, 2026 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது, இதையொட்டி, பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பத்தை உறுதி செய்யும் வகையிலும், ஓட்டு அளிக்கும் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் மடுகரை,சூரமங்கலம், பண்டசோழநல்லுார், நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் ஆகிய பகுதிகளில் நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மா, சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில்போலீசார் மற்றம் 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைவீரர்கள் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

