/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
/
பெண் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
ADDED : நவ 02, 2024 07:35 AM
பாகூர்: பாகூர் பேட், தேசமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விஜய் அமிர்தராஜ் மனைவி மஞ்சுளா, 34; அங்குள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணி செய்கிறார். விஜய் அமிர்தராஜியின் சகோதரி மாலதி, அதே பகுதியை சேர்ந்த மறைந்த லிங்கேசனின் மனைவி மின் துறை ஊழியரான ஜீவாவை தாக்கியது தொடர்பாக, பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜீவாவின் உறவினரான ஆனந்தாய் உள்ளிட்டோர், கடந்த 30ம் தேதி மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று, ஜீவாவை கொலை செய்ய வந்த மாலதியை நீ தான் மறைத்து வைத்துள்ளாயா? என்று கேட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மஞ்சுளா புகாரின் பேரில், ஆனந்தாய், அவரது மகன்கள் உத்தீப், சரண், மற்றும் சுஜித்ரா ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

