ADDED : ஜூலை 13, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் புறவழிச்சாலையில், முருங்கப்பாக்கம் ஆறு உள்ளது.
நேற்று காலை 11:00 மணியளவில், ஆண் சடலம் மிதப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஏ.எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று, ஆற்றில் மிதந்த சடலத்தை, மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். அவர் முருங்கப்பாக்கம், பள்ளத் தெருவை சேர்ந்த டிரைவர் ஆனந்தன், 56, என்பது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.