ADDED : மே 19, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஏம்பலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம் வில்லியனுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அருள்குமார் 29, கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் செம்பியப்பாளையம் செங்கழுநீர் அம்மன் கோவில் அருகில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்து குடிபோதையில் இறந்தாரா, வேறு ஏதாவது காரணத்தினால் இறந்தரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.