ADDED : அக் 15, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுாரில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் வடக்கு மாட வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் எதிரில் 65, வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.