ADDED : ஏப் 17, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போதை நபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கதிர்காமம், பார்த்தசாரதி வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 46. இவர், வேலைக்குச் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். நேற்று முன்தினம் மதியம், மகேந்திரன் மது அருந்திவிட்டு வீட்டில் படுத்துக் கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் விஜயகுமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மகேந்திரன் இறந்ததை உறுதி செய்தனர்.
இது குறித்து புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
