/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு
/
போலீசார் ரோந்து பணி எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : நவ 01, 2024 05:48 AM

திருக்கனுார்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருக்கனுார் பகுதியில் போலீசாரின் ரோந்து பணிகளை எஸ்.பி. வம்சித ரெட்டி நேற்றிரவு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி தீபாவளி பண்டிகை முன்னிட்டு குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி., வம்சித ரெட்டி நேற்றிரவு 7:40 மணி அளவில் திருக்கனுார் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். திருக்கனுார் - கே.ஆர்.பாளையம் சாலை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசாரிடம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பஜார் வீதி மற்றும் எல்லைகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்றிந்தார்.
போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மீறி யானும் பட்டாசுகள் வெடித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

