sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை

/

பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை

பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை

பஸ் நிலையத்தில் போலீஸ் சோதனை


ADDED : அக் 08, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 08, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடையில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகர பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களைதடுக்கும் பொருட்டு, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, கிழக்கு பகுதி எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா ஆகியோர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யாநாராயணா, சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் நேற்றிரவு சாதாரண உடையில்,புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில், ஏறி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளனரா என, சோதனை செய்தனர்.

மேலும், பஸ்சிற்காக காத்திருந்தவர்களில் சந்தேகப்படும் படி நின்றிருந்த நபர்களை பிடித்து, அவர்களின் உடமைகளை ஆய்வு செய்தனர். பஸ் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us