ADDED : நவ 14, 2025 11:33 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை, சாலையின் இருபுறமும் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் கண்ணன், அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்ததார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
