/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
/
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் வழக்கு பதிவு
ADDED : அக் 18, 2024 06:16 AM
புதுச்சேரி: புதுச்சேரி, வேல்ராம்பேட் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 43; கட்டட ஒப்பந்ததாரர். இவருக்கும், மொட்டதோப்பு அண்ணாமலை நகரை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் கடந்த 2011ல் திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், லட்சுமியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு விநாயகமூர்த்தி, அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் அடிக்கடி தகராறு செய்து, அடித்து கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதனிடையே விநாயகமூர்த்திக்கு, 2 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், லட்சுமி விநாயகமூர்த்தியை பிரிந்து, தனது தாய் வீட்டில் வசிக்கிறார்.
லட்சுமி வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாக அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விநாயகமூர்த்தி, அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.