/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மூலநாதர் கோவிலில் போலீசார் சிறப்பு வழிபாடு
/
பாகூர் மூலநாதர் கோவிலில் போலீசார் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2024 05:52 AM

பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பாகூர் போலீசார் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று பாகூர் போலீசார், மூலநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிச் நடந்தது. இதில், மாணிக்கவாசகர் அருளிய திருவாசக பாடல்கள் பாடப்பட்டு , திருப்பள்ளி எழுச்சி நடந்தது.
தொடர்ந்து, 5:00 மணிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் போன்ற திரவியங்களால் மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 1008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.
இதில், புதுச்சேரி போலீஸ் தெற்கு பிரிவு எஸ்.பி., வீரவல்லபன், பாகூர் சரக இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கர் நந்தக்குமார், சந்திரசேகர், உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

