sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்

/

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்

போதை ஆசாமி தாக்கி போலீஸ்காரர் காயம்


ADDED : ஜன 13, 2025 04:03 AM

Google News

ADDED : ஜன 13, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் போதை ஆசாமி பீர் பாட்டிலால் தாக்கியதில், போலீஸ்காரர் காயமடைந்தார்.

கடலுார் சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் குடிபோதையில் வாலிபர் ஒருவர் உடைந்த பீர் பாட்டிலால் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீஸ்காரர்கள் விநாயகமூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் சென்று வாலிபரிடம் விசாரித்தனர். அவர், நெல்லிக்குப்பம் அடுத்த சரவணபுரத்தை சேர்ந்த தினேஷ் ராஜா, 32; என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போதை ஆசாமியின் கையில் இருந்த பீர் பாட்டிலை போலீஸ்காரர்கள் பறிக்க முயன்றனர். அப்போது, தினேஷ்ராஜா கையில் இருந்த பீர் பாட்டிலால், போலீஸ்காரர் விநாயகமூர்த்தி வயிற்றில் குத்தினார். காயமடைந்த விநாயகமூர்த்தி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போதையில் இருந்த தினேஷ்ராஜா கீழே விழுந்ததில் காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் தினேஷ்ராஜா மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us