/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்குகாளான் வளர்ப்பு குறித்து பயிற்சி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்குகாளான் வளர்ப்பு குறித்து பயிற்சி
மகளிர் சுய உதவி குழுக்களுக்குகாளான் வளர்ப்பு குறித்து பயிற்சி
மகளிர் சுய உதவி குழுக்களுக்குகாளான் வளர்ப்பு குறித்து பயிற்சி
ADDED : செப் 15, 2011 10:52 PM
புதுச்சேரி:மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து
பயிற்சி முகாம் நடந்தது.லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் புஷ்பகாந்தி அரவணைப்பு
இல்லத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து
பயிற்சி முகாம்நடந்தது.
குறிஞ்சி நகர் நலவாழ்வு சங்க தலைவர் ராஜசெல்வம்
தலைமை தாங்கினார். சாரோன் சொசைட்டி புதுச்சேரி செயலாளர் மோகன்
வரவேற்றார்.ஜே.சி.ஐ., தலைவர் நரேன்பாபு, செயலாளர் ராஜா முன்னிலை
வகித்தனர். காளான் வளர்ப்பு முகாமை கமலா அறக்கட்டளை நிறுவனர் வைத்தியநாதன்
துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து
கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஜே.சி.ஐ., புதுச்சேரி மெட்ரோ , சரோன் சொசைட்டி
ஆப் புதுச்சேரி இணைந்து செய்திருந்தன.சுகுணா நன்றி கூறினார்.