ADDED : அக் 13, 2011 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து
கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்
செய்து தேர்வு எழுதியதாக அவர் மீது திண்டிவனம் போலீசில் புகார்
செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு
செய்தனர். இந்நிலையில் லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மாணவர்கள்,
அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நேற்று காலை
வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் காலாப்பட்டு
அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து
ஆர்ப்பாட்டம் செய்தனர்.

