கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா
கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா
ADDED : ஜூன் 27, 2012 02:04 AM
வில்லியனூர்:கோபாலன் கடை கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா
நடந்தது.மூலகுளம் அருகே உள்ள கோபாலன்கடை கிரிக்கெட் கிளப் சார்பில்
கிராமத்தில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி துவங்கியது.
புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. நேற்று
முன்தினம் நடந்த இறுதி போட்டியில் கோபாலன்கடை கிரிக்கெட் கிளப் அணியும்
அரும்பார்த்தபுரம் பிரன்ட்ஸ் கிளப் அணியும் மோதின.
இதில் கோபான்கடை
கிரிக்கெட் கிளப் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
விழா நேற்று முன் தினம் மாலை நடந்தது.தணிகைமலை தலைமை தாங்கினார். என்.ஆர்.
காங்., பிரமுகர்கள் கோபி மற்றும் தாஸ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு
விருந்தினராக ஊசுடு தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் வேல்முருகன் பங்கேற்று
போட்டியில் வெற்றி பெற்ற கோபாலன்கடை கிரிக்கெட் அணிக்கு 3000 ரூபாய்,
இரண்டாம் பரிசு பெற்ற அரும்பார்த்தபுரம் பிரன்ட்ஸ் கிளப் அணிக்கு 2000
ரூபாய் மற்றும் சிறந்த ஆட்ட நாயகன் உள்ளிட்ட வீரர்களுக்கும் தனித்தனியாக
பரிசுகளை வழங்கினார். முன்னதாக என்.ஆர். காங்., இளைஞரணி வீராசாமி
விளையாட்டு வீரர்களுக்குச் சீருடைகளை வழங்கினார்.
