ADDED : ஜன 15, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆல்பா மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
உருளையன்பேட்டை, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது.
இந்த விழாவில், கோலமிட்டு , மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
உழவர்களுக்குநன்றி தெரிவிக்கும் பொருட்டு, மண்வாசனை மாறாமல் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர்.
விழாவில் ஆல்பா குழுமங்களின் இயக்குனர் தனதியாகு, தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.