/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : செப் 20, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி, காலை 9.00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.