sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு

/

அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு

அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு

அரசு பள்ளி மாணவர்கள் பொங்கல் வாழ்த்து மடல் தயாரிப்பு


ADDED : ஜன 13, 2025 06:09 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : திரு.வி.க., உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், நவீன அறிவியல் வளர்ச்சியால் மறக்கப்பட்ட பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பும் முறையை மீண்டும் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா கரும்பு, மாடு, புத்தாடை என அவற்றின் சிறப்புகள் நீண்டு கொண்டே செல்லும். அதில், பொங்கல் வாழ்த்து மடல் அட்டை அனுப்பும் முறையும் ஒன்றாக இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் பொங்கல் வாழ்த்து அட்டைகளை கடைகளில் வாங்கி, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர். ஆனால், நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வாட்ஸ் ஆப், பேஸ் புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால், பொங்கல் வாழ்த்து மடல் அனுப்பும் வழக்கத்தையே மறந்தும் விட்டோம்.

அப்படி மறக்கப்பட்ட வாழ்த்து அட்டை அனுப்பும் அழகான வழக்கத்தை மீட்டெடுக்கும் பணியில் அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இறங்கியுள்ளனர். ஓவிய ஆசிரியர் அன்பழகனின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் தங்கள் கைகளினால் பொங்கல் வாழ்த்து மடலை தயாரித்து, அதில் பல வண்ண ஓவியங்களை வரைந்து, அதன் உள்ளே பொங்கல் வாழ்த்து கவிதைகளை எழுதி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பினர்.

பொங்கல் வாழ்த்து மடலை தயார் செய்த அனைத்து மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசு பாராட்டி ஊக்கப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us